×

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

திருச்சி, ஏப். 7: தமிழ்நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சலை தடுக்க அந்தந்த மாவட்டம், மாநகரில் சிறப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்றும் (7ம் தேதி) காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர பகுதிகளில் இன்று (7ம் தேதி) சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி காலையில் பீமநகர் ஆரம்பசுகாதார நிலையத்திற்குட்பட்ட பக்காலி தெரு அங்கன்வாடி மையம், பீரங்கி குளம் சவுராஷ்டிரா தெரு, இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு, எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் பாங்க் காலனி,

காந்திபுரம் சொமுபிள்ளை தோப்பு, இருதயபுரம் தென்மேற்கு யாதவர் தெரு, காமராஜ் நகர் டிஎஸ்என் அவென்யூ, காட்டூர் ஜெகநாதபுரம், மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை தெரு, பெரிய மிளகுபாறை வசந்த நகர், ராமலிங்கநகர் கீலாதெரு, ரங்கம் காந்தி சாலை, சுப்பிரமணியபுரம் எல்எஸ்பி திருவள்ளூவர் தெரு, டிவிஎஸ் டோல்கேட், தெப்பக்குளம் பட்டர்வெர்த் சாலை, தென்னூர் குப்பாங்குளம், திருவெறும்பூர் கக்கன் காலனி, திருவானைக்காவல் காந்தி சாலை, உறையூர் வண்டிக்கார தெரு ஆகிய பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் காலையில் நடத்தப்பட உள்ளது. அதுபோல் மாலையில் இதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அடைக்கலமாதா கோவில், மன்னார்பிள்ளை தெரு, சுந்தரி தோப்பு, பாப்பா காலனி, வெள்ளை தெரு, வரகனேரி மெட்டு தெரு, அந்தோணியார் கோவில் தெரு, ஸ்டாலின் நகர், நாகம்மா தெரு படிப்பகம், கீழதெரு, கீதாநகர், இவிஎஸ் சாலை, காஜாமலை காலனி, சங்கரன்பிள்ளை தெரு, மதுரை ரோடு, அம்பேத்கர் நகர், சீனிவாச நகர், பெரிய சவுராஷ்டிரா தெரு ஆகிய இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடக்கிறது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியுள்ளார்.

The post திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Trichy Municipal Corporation ,Trichy ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...